சாந்தி உடையப்பன்
Writer
அன்பானவர்களுக்கு,
ஒரு இனிய செய்தி.
கடந்து 28 வருடங்களாக நான் எழுதுகிறேன். கண்ணில் கண்டதை, மனத்தைத் தொட்டதை எல்லாம் கவிதைகளாக எழுத்து வடிவம் பெறும்.
திருமணத்திற்கு முன் என் கணவரைச் சந்தித்த போது நான் பேசிய கவிதை வீடியோ அனுப்பினேன். அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் பேச்சு மொழி மட்டுமே தமிழ் அவருக்கு.
ஒன்றும் புரியவில்லை என பதில் அனுப்பினார். 'நீ ஒரு கருத்தை சொல்ல வருகிறாய் ஆனால் அதைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டுமானால் எளிமையாக்கு' என சொல்லிக் கொண்டிருப்பார்.
அதுவரை இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவில்லை.
இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு படைப்புக்குப் பின் பிறர் தரும் கருத்துகள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் முக்கியமானது.
எங்கோ அன்றாட வாழ்வில் தமிழை காதுகளில் கேட்க முடியாது வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இப்பொழுது எழுத்துக்களால் உங்களுடன் பேச ஒரு வாய்ப்பாகத் தான் இத்தளத்தை கருதுகிறேன்.
வால்வெள்ளி ஓவியத்திற்கு நீங்கள் காட்டும் ஆதரவு மகிழ்விக்கிறது என்னை மிக மிக.
இந்த நாவல் முடியுற்ற பிறகு, ஒரு சின்ன விமர்சன அலசல் வைத்துக் கொள்வோமா?
ஹானஸ்ட் ரிவ்யூ, உண்மைத்தன்மை உடனான விமர்சனம்; அதில் நிறையும் இருக்கலாம், அட போமா ஒன்னும் புரியல...அப்படின்னும் இருக்கலாம், இரண்டும் கலந்தும் இருக்கலாம். எழுதறீங்களா?
சிறந்த விமர்சனப் படைப்பு மூன்றுக்கு ஒரு பரிசு உண்டு.
என்ன பரிசு கொடுக்கலாம்??
நம் சரண்யாவின் 'ஸ்டோரிஸ் ஹட் ஆப்' சந்தா இரண்டு மாதங்களுக்கு மூன்று பேருக்கும் கொடுக்கலாமே!
எழுதுவீங்களா?
ஏன் இது எனக்கு முக்கியமானது?
உங்கள் கருத்துகள் என் எழுத்தை மேம்படுத்த வெகுவாக உதவும். உதவுங்களேன்.
கதை முடிவடைந்தவுடன், இந்தத் திரியிலேயே உங்கள் விமர்சனங்களைப் பதிவிட வேண்டுகிறேன்.
மனம் நிறைந்த நன்றியும் அன்பும்,
சாந்தி உடையப்பன்.
ஒரு இனிய செய்தி.
கடந்து 28 வருடங்களாக நான் எழுதுகிறேன். கண்ணில் கண்டதை, மனத்தைத் தொட்டதை எல்லாம் கவிதைகளாக எழுத்து வடிவம் பெறும்.
திருமணத்திற்கு முன் என் கணவரைச் சந்தித்த போது நான் பேசிய கவிதை வீடியோ அனுப்பினேன். அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் பேச்சு மொழி மட்டுமே தமிழ் அவருக்கு.
ஒன்றும் புரியவில்லை என பதில் அனுப்பினார். 'நீ ஒரு கருத்தை சொல்ல வருகிறாய் ஆனால் அதைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டுமானால் எளிமையாக்கு' என சொல்லிக் கொண்டிருப்பார்.
அதுவரை இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவில்லை.
இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு படைப்புக்குப் பின் பிறர் தரும் கருத்துகள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் முக்கியமானது.
எங்கோ அன்றாட வாழ்வில் தமிழை காதுகளில் கேட்க முடியாது வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இப்பொழுது எழுத்துக்களால் உங்களுடன் பேச ஒரு வாய்ப்பாகத் தான் இத்தளத்தை கருதுகிறேன்.
வால்வெள்ளி ஓவியத்திற்கு நீங்கள் காட்டும் ஆதரவு மகிழ்விக்கிறது என்னை மிக மிக.
இந்த நாவல் முடியுற்ற பிறகு, ஒரு சின்ன விமர்சன அலசல் வைத்துக் கொள்வோமா?
ஹானஸ்ட் ரிவ்யூ, உண்மைத்தன்மை உடனான விமர்சனம்; அதில் நிறையும் இருக்கலாம், அட போமா ஒன்னும் புரியல...அப்படின்னும் இருக்கலாம், இரண்டும் கலந்தும் இருக்கலாம். எழுதறீங்களா?
சிறந்த விமர்சனப் படைப்பு மூன்றுக்கு ஒரு பரிசு உண்டு.
என்ன பரிசு கொடுக்கலாம்??
நம் சரண்யாவின் 'ஸ்டோரிஸ் ஹட் ஆப்' சந்தா இரண்டு மாதங்களுக்கு மூன்று பேருக்கும் கொடுக்கலாமே!
எழுதுவீங்களா?
ஏன் இது எனக்கு முக்கியமானது?
உங்கள் கருத்துகள் என் எழுத்தை மேம்படுத்த வெகுவாக உதவும். உதவுங்களேன்.
கதை முடிவடைந்தவுடன், இந்தத் திரியிலேயே உங்கள் விமர்சனங்களைப் பதிவிட வேண்டுகிறேன்.
மனம் நிறைந்த நன்றியும் அன்பும்,
சாந்தி உடையப்பன்.
Last edited:
