• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வீழ்வது விதைக்கப் படுவதற்கே !!!

அங்காள்

SH Crystal Member
இருள் சூழ்ந்த வெறுமை கண்டேன்
வெளிச்சத்திற்கான தேடலில்

கருமேகம் போல் துன்பங்கள்
என்னைச் சுற்றி வளைக்க
இடிகள் போல் வலிகள் இடிக்க
கனமழை போல் கஷ்டம் பொழிந்தது !

சோர்ந்து போனேன் சோகத்தின் சூழ்ச்சியால்
பொங்கி எழுந்தன என்னுள் கேள்விகள்

கனவுகள் என்றும் காயங்களா ?
முயற்சி வெறும் வலிகளா ?
தேடல் தருவது துக்கங்களா ?
விதைகள் இருப்பது வீழ்வதற்கா ?

முக்கடலைத் தேடினேன்
மூழ்கி எழுந்தால்
மோட்சம் கிடைக்கு மென்று ...

மூழ்கிப் போன என்னை உலுக்கி எழுப்ப
பரிதியின் கதிரால் விழித்துக் கொண்டேன் !

காயங்கள் பாடங்களாக
வலிகள் வேதங்களாக
மாணவனானேன் வாழ்க்கை
என் ஆசானான போது !

கேள்விக்கான பதிலைப் பெற்றேன்
விரிவுபெற்ற என் பார்வையால் !

விதைகள் வீழ்வது துயரத்தால் அல்ல
மரமாக விதைக்கப் பெற்று
காட்டை உருவாக்குவதற்கென்று !

கற்பிக்க வாழ்க்கை தயாராக
கற்றுக்கொள்ள நான் தயாரானேன் !

முட்டாள் மனமே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ?

தேர்வு முடிந்த பிறகு கற்றேன்
வீழ்வது விதைக்கப் படுவதற்கே என்று !!!
 

Attachments

  • 16.webp
    16.webp
    275.1 KB · Views: 0
Back
Top
Developed and maintained by – Akeshya