அங்காள்
SH Crystal Member
தனித்து நின்றேன்
சுயநலம் என்றனர்
கும்பலோடு கலந்தேன்
திறமை யற்றவள் என்றனர்
பேசிப் பழகினேன்
வாயாடி என்றனர்
மௌனம் காத்தேன்
தந்திரம் என்றனர்
தவறுகளை தண்டித்தேன்
அராஜகம் என்றனர்
பணிவுடன் கூறினேன்
கோழை என்றனர்
மதித்து நடந்தேன்
ஜால்ரா என்றனர்
குரல் கொடுத்தேன்
திமிர் என்றனர்
பாதுகாப்போடு இருந்தேன்
பயந்தவள் என்றனர்
துணிவோடு செயல்பட்டேன்
அகம்பாவம் என்றனர்
சுயமரியாதை காத்தேன்
ஆணவம் என்றனர்
விட்டுக் கொடுத்தேன்
தூக்கி எறிந்தனர்
உயர்வான மனித இனத்தின்
உயராத உயரம் கண்டேன் !!!
சுயநலம் என்றனர்
கும்பலோடு கலந்தேன்
திறமை யற்றவள் என்றனர்
பேசிப் பழகினேன்
வாயாடி என்றனர்
மௌனம் காத்தேன்
தந்திரம் என்றனர்
தவறுகளை தண்டித்தேன்
அராஜகம் என்றனர்
பணிவுடன் கூறினேன்
கோழை என்றனர்
மதித்து நடந்தேன்
ஜால்ரா என்றனர்
குரல் கொடுத்தேன்
திமிர் என்றனர்
பாதுகாப்போடு இருந்தேன்
பயந்தவள் என்றனர்
துணிவோடு செயல்பட்டேன்
அகம்பாவம் என்றனர்
சுயமரியாதை காத்தேன்
ஆணவம் என்றனர்
விட்டுக் கொடுத்தேன்
தூக்கி எறிந்தனர்
உயர்வான மனித இனத்தின்
உயராத உயரம் கண்டேன் !!!