• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வால்வெள்ளி ஓவியம்-21

உங்களில் சிலர் ரசிப்பதாக சொல்லிய ராஜாம்பாள் உண்மையில் வாழ்ந்தாள். என் தத்து அப்பத்தா, ஐவிரல் கோர்த்து உணவு உண்ணு எனச் சொல்லிக் கொடுத்ததிலிருந்து, நான் என்ன செய்தாலும் ரசித்தவள்.

தன் அருகே அமர்த்தி கவிதை சொல்ல பணிப்பாள். சொல்லி முடித்து புரிகிறதா என்றால் எனக்கெங்கே புரிய, நீ படிகிறது பார்க்க ஆனந்தமா இருக்கு சாந்தாயி (அப்படித் தான் அழைப்பாள்) என தாடை பிடித்துக் கொஞ்சுவாள்.

அவளது கணக்குத் தான் மாஸ்டர்ஸ் பதினேழு என்பது :giggle:

என் திருமணச் சோறு ஒரு பிடியாவது உண்ணக் காத்திருந்தவள், என் திருமணத்தின் போது மரணப் படுக்கையில் விழுந்து போனாள் :cry:. வழியில்லாது ஒரு கரண்டி பாயாசம் புகட்டினோம்! இந்த அத்தியாயம் எழுதும் போது என் அப்பத்தா மனதில் மேல் எழுப்புகிறாள். எங்காவது ஒரு வடிவில் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். நம்புகிறேன்.❤️

அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

வால்வெள்ளி ஓவியம்-21 (1)
வால்வெள்ளி ஓவியம்-21 (2)
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya