• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 11

GomathyArun

Writer

உறவு 11

அதியன் நெடுமாறனின் செயலில் காயத்ரி, “இன்னிக்கு வந்தவுளுக்கா… தூக்கி வளத்த அத்தய வுட்டுக் கொடுக்கியா அதியா! மதிய பத்திய வருத்தம் இல்லயா? இப்புடி ஆச காட்டி மோசம் செஞ்சிப்புட்டியே! நியாயமா?” என்றவர்,

“ஊருக்கே நீதிமான், ஆனா எம்மவளுக்கு மட்டு அநீதிமான்.. இத கேக்க ஆருமில்லயா?”
என்று பெருங்குரலெடுத்து கத்தினார்.

“மொத சத்தத்த கொறச்சிட்டு, வூட்டுக்கு உள்ளார போயி பேசுக”

“நா… ஏஞ்சத்தத்த கொறக்கனு? அப்பன் மவென் வண்டவாளம் தண்டவாளம் ஏறட்டுமே!”
என்றவர், “இந்தாட்டீ, சீம சித்தராங்கி! வெளிய வாடி” என்றார்.

சாருவர்தினி அவர் பார்வையில் படும்படி நகர்ந்து நிற்கவும், “ஓ வூட்டுல சொல்லி வளக்கலயோ?” என்று கேட்டார்.

அவள் அதியன் நெடுமாறனைப் பார்க்க, அவரோ, “அங்கன என்னடி பார்வ? கண்ண நோண்டி புடுவே.. என்னிய பாத்து பதிலு சொல்லு” என்றார்.

மகிழுந்தில் அமர்ந்திருந்த வித்யாவிற்கு, இவ்வளவு நேரம் இல்லாத பதற்றம் இப்பொழுது தொற்றிக் கொண்டது.

கைகளைக் கட்டியபடி காயத்ரியை பார்த்தவள், “என்ன சொல்லணும்?” என்று அழுத்தமான நிதான குரலில் கேட்டாள்.

“அதேன் கேட்டேனே! ஓவ்வூட்டுல சொல்லி வளக்கலயோ?”

“என்னனு? இப்படி உங்களை மாதிரி மொட்டையா பேசவா? சாரி, அப்படி கத்துத் தரலை.”

“இவெள பாத்தியா ஜெயா! எம்புட்டு தெனாவெட்டா பேசுதா?”

“நீங்க தான் பதில் சொல்ல சொன்னீங்க.. சொன்னேன்.. பொத்தம் பொதுவா கேள்வி கேட்டா, இப்படி தான் பதில் சொல்ல முடியும்.”

“பெரியவகனுட்டு கொஞ்சமாச்சு மரியாத இருக்கா?”

“இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க? பதில் சொல்லனுமா சொல்ல கூடாதா?”

“மரியாதையா சொல்லுடி”

“நீங்க தரம் இல்லாம சிறுக்கினு சொல்லியும், மரியாதை இல்லாம டி போட்டு பேசியும், நான் உங்களுக்கு மரியாதை கொடுத்து அமைதியா தான் பேசிட்டு இருக்கிறேன்.. நான் நல்ல பண்புடன் தான் வளர்ந்து இருக்கிறேன்.”

“அப்ப எனக்கு நல்ல பண்பு இல்லனுட்டு சொல்லுதியா?”
என்று கத்தியவர், “பாத்தியாணே… நீயி தேடிப் புடிச்சி கொண்டாந்த மருமவ லச்சணத்த..!” என்று ஏளனம் செய்தார்.

அவரோ, “எதா இருந்தாலு.. ஏங்கிட்டக்க பேசு.. நாஞ்சொன்னதால மட்டுந்தே.. இந்தக் கலியாணம் நடந்துச்சி” என்றார்.

“ஆத்தாடியாத்தா! அர.. நாளு முடியல, அதுக்குள்ளாரவே ஏ.. அண்ணனையு.. அண்ணே மவனயு… எனக்கு எதிரா திருப்பிப் புட்டாளே!” என்றவர் மகளைப் பார்த்து,

“துணிமணிய கட்டி வெச்சிக்க மதி.. எந்நேரன்னாலு… நம்மள வூட்ட வுட்டு தொரத்திப் புடுவாக.” என்றார்.

பின், “இந்த வூடுதேன ஒலகம்னுட்டு எம் மவ வளந்தா! அவ மனசுல ஆசய வளத்துப்புட்டு இப்புடி செய்யுறதுக்கு, அவ பொறந்தன்னிக்கே கள்ளிப்பால ஊத்தி இருக்கலாமே!” என்று ஒப்பாரி வைத்தார்.

அதியன் நெடுமாறன், “அப்பா, நா… நவநீய மருத்துவச்சி வூட்டுக்கு கூட்டிட்டு போறேன்.” என்றான்.

அதற்கும் காயத்ரி, “ஒனக்கு மனசாட்சியே இல்லியா, அதியா?” என்றார்.

“ஒங்களுக்கு அது இருக்கா? ஒருத்தன் மயங்கி கெடக்கானுட்டு ரோசிச்சியலா?”

“ஏம்மவ வாழ்க்கய அழிச்சவெனப் பத்தி, நா.. என்னாத்துக்கு ரோசிக்கனு?”

“கஷ்டத்துலதே ஒரு மனுசனோட கொணம் தெரியும்பாங்க.. இதேன் நீக..”

“நா… பாதிக்கப்பட்டவ.. பேசதே செய்வேன்”

“அதுக்காண்டி மட்டுதே அமைதியா இருக்கேன்.. ஆனாலு… நம்ம வூடு, நம்ம அண்ணே, நம்ம அண்ணே பசங்கனுட்டு தம்முதுண்டு பாசம் கூட ஒங்களுக்கு இல்லல..! இப்பயு மதி வாழ்க்கைக்கு எதுவுமாவல.. நீகளே பேசி பேசி கெடுத்துப்புடாதீக.. நடந்தத மாத்த முடியாது.. அம்மையு மவளு ஏத்துக்க பழகுக.. அம்புட்டுதே…!”
என்றவன்

மனைவியிடம், “போயிட்டு வாரேன்.” என்றான்.

“இரு அதியா.. நீயி இல்லாம… அந்தப் புள்ள மட்டும் எப்புடி உள்ளார வாரும்? மொத மொற ஜோடியாதே.. வாரனு..” என்ற நெல்லையப்பன்,

“அம்மாடி லட்சுமி, ஆரத்தி எடுத்தா.” என்றார்.

ஜெயலட்சுமியோ மகனை முறைத்தபடி, “மாப்பு கேக்கேன் மாமா.. இவுகளுக்கு என்னியால ஆரத்தி எடுக்க முடியாது.” என்றார்.

“என்ன இருந்தாலு… அவென் ஓம்மவென்.”

“அதுக்காண்டி செய்த தப்ப நியாயப்படுத்த முடியாதே! மதி மின்னவே இன்னொருத்திய அவென் கூட்டாரத.. நா.. விரும்பல..”

“வார்த்த தப்பாச்சி, அம்புட்டுதே...!”
என்று கோபத்துடன் கூறிய கந்தவேல், “அவென், என்ன மொற இல்லாமயா வந்து நிக்குதியான்? நா… நடத்தி வெச்ச கலியாணம்.. ஒனக்குதே எம்மேல எம்புட்டு மருவாத…!” என்றார்.

கணவரின் வார்த்தைகளில் சிறு திடுக்கிடலுடன் மனம் வலித்தாலும், பிடிவாதத்துடன் அமைதியாகவே நின்றார்.

“சங்கரி.. நீயி கொண்டாமா.” என்றதும், சங்கரி உள்ளே செல்ல,

ஜெயலட்சுமி கோபத்துடனும், காயத்ரியும் நிறைமதியும் வன்மமும் வெறுப்புமாக நின்றிருந்தனர்.

சாருவர்தினி, “வித்யா காருக்குள்ள இருக்கா போல…” என்று அதியன் நெடுமாறனிடம் கூற,

அவன் மஞ்சுளாவை பார்வையால் அழைத்தான்.

‘இதுக்கும் சேத்து அக்கா ஆடுவாளே!’ என்று நினைத்தபடி, அவன் அருகில் வந்தார்.

“வண்டிக்குள்ளார சாருவர்தினி தோழி இருக்காக.. வூட்டுக்கு உள்ளார கூட்டி வந்துடுக”

“சாருவர்தினி யாருடா?”
என்று கேட்டவர், அவனது பார்வையில், “ஓ… எம்மவ பேரா! நீயி சொல்லாம தெரிஞ்சிக்க, நாஞ்.. ஜோசியம் கத்துகலியே!” என்றார்.

பின் அவள் பக்கம் திரும்பியவர், “வாத்தா.. இவென் சொல்லுறதாட்டம் தெர்ல.. நானே சொல்லிப்புடுறே.. நா.. மஞ்சுளா, இவெனோட சின்னத்த…, ஒனக்கு சின்னம்மை.. பொறவாட்டி பேசுதே..! இல்ல… செத்த நேரத்துல என்னிய காயத்ரி சுனாமி தாக்கிப்புடும்.. அது யே... அக்காதே…” என்றார்.

மென்னகையுடன், “நான் உங்களை மஞ்சுமானு கூப்பிடவா?” என்று கேட்டாள்.

கனிவுடன், “கூப்பிடுடா” என்றவர், ஓரப்பார்வையில் இடதுபுறம் பார்த்தபடி,

“ஆத்தி! ஒன்னுக்கு மூனு சுனாமி தாக்க தயாரா இருக்கு.. நா… கெளம்புதே!” என்று விட்டு நகர்ந்தார்.

சங்கரியும் மஞ்சுளாவும் ஆரத்தி எடுத்ததும், இருவரும் உள்ளே சென்றனர். சாருவர்தினி உள்ளே அடி எடுத்து வைக்கையில், நிறைமதி வேண்டுமென்று பின்னால் இருந்து அவளைத் தள்ளினாள்.

சற்றே தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டவள், தன்னை தள்ளியது யாரென்று திரும்பிப் பார்த்தாள். நிறைமதி இவளை கடுமையாக முறைக்க, இவளோ சிறு தோள் குலுக்கலுடன் திரும்பிக் கொண்டாள்.

அப்பொழுதும் அடங்காமல், “என்னிய மீறி எப்புடி நீ வாழுதனுட்டு பாக்கேன்.” என்று முணுமுணுக்க,

இவளோ அதே அலட்டிகொள்ளாத பாவனையுடன், “ஆல் தி பெஸ்ட்” என்றாள்.

அதியன் நெடுமாறன், “என்னாச்சு?” என்று வினவ,

நிறைமதி, “தெரியாம இடிச்சதுக்கு திட்டுதாக மாமா.” என்று கண்ணீருடன் உருக்கமான வேதனை நிறைந்த குரலில் கூறினாள்.

அவன் யோசனையுடன் மனைவியை பார்க்க,

அவளோ அவனை அமைதியாகப் பார்த்தாள்.

அதற்குள் ஆரத்தியை தெரு வாசலில் ஊற்றிவிட்டு, வித்யாவை அழைத்து வந்த மஞ்சுளா, “தாத்தா கிட்டக்க, ஆசி வாங்குக” என்றார்.

அவனது கவனம் அதில் திரும்ப, நிறைமதி யாரும் அறியாமல் இவளை உதட்டோர வெற்றிப் புன்னைகையுடன் பார்க்க, இவளோ சிறிதும் அசராமல் உதட்டைச் சுழிக்க, அதில் அவள் தான் ஆத்திரமடைந்தாள்.

தொடர்ச்சி கீழே..
 
இருவரும், நெல்லையப்பன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

“சீரும் சிறப்புமா எல்லா வளமும் பெற்று, பல்லாண்டு மகிழ்ச்சியோட நல்லா இருக…!” என்று வாழ்த்தினார்.

காயத்ரி, “அப்பா” என்று ஆரம்பிக்க,

அவரோ, “அதியன் சொன்னதுதே..! நடந்து முடிஞ்சத மாத்த முடியாது.. ஊருக்கே தீர்ப்பு சொல்லுற எம்மவன், காரண காரியமில்லாம எதுவுஞ் செய்ய மாட்டான். அத அவென கட்டிக்கிட்டவளு புரிஞ்சிக்கல, ஒடன் பொறந்தவளு புரிஞ்சிக்கல…” என்று முடித்துவிட்டார்.

கந்தவேலுவும், அதியன் நெடுமாறனும் ஜெயலட்சுமியை பார்க்க, மனதினுள் ஏதோ செய்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் இவர்களிடம் முகம் திருப்பியவர், காயத்ரி மற்றும் நிறைமதி பக்கம் தான் நின்றார்.

அடுத்து, குமரவேல் சங்கரி தம்பதியர் மற்றும் ராஜன் மஞ்சுளா தம்பதியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

அவர்களும் நல்லதாகவே வாழ்த்தினர்.

மஞ்சுளாவிடம், “பாத்துகிடுக அத்த...” என்றவன் மனைவியிடம் தலையசைத்து விடைபெற்று, தம்பியை தனது வாகனத்தில் நாட்டு மருத்துவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவனது மனம், மீண்டும் தம்பியை நினைத்து வேதனையில் தவித்தது.

அதியன் நெடுமாறன், நவநீதனுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இங்கே வீட்டில் விருந்தினர் அறையில் சாருவர்தினி, வித்யா, நந்தினி மற்றும் இளம்தென்றல் பேசிக் கொண்டு இருந்தனர்.

அதியன் நெடுமாறன் சென்றதும், கந்தவேல், “பிள்ளைல சாப்பிட வைக” என்றார்.

“செரி மாமா” என்ற சங்கரி, “நீக?” என்று கேட்டார்.

“மொத பிள்ளைல கெவனிமா” என்று விட்டார்.

“வாங்க” என்று சாருவர்தினி மற்றும் வித்யாவை அழைத்தவர், “நா… போயி எடுத்து வெக்கிறே…” என்றபடி முன்னால் சென்றார்.

மஞ்சுளாவிடம் பேசியபடி சென்ற சாருவர்தினியை வன்மத்துடன் பார்த்த காயத்ரி… ஜெயலட்சுமியிடம், “அதியன் உண்கலனுட்டு நெனப்பே இல்லாம போவுதா பாரு.. இதே மதியா இருந்தாக்க, ‘மாமா உண்கயில வாரேனுட்டு’ சொல்லியிருப்பா” என்றார்.

“அவென்தே உண்டானே!” என்ற தோழியை முறைத்தவர், “அது அவெளுக்கு தெரியாதே!” என்றபடி உண்ணும் அறைக்குச் சென்றனர். நிறைமதியும் அவர்களுடன் சென்றாள்.

சரியாக சாருவர்தினி முதல் துண்டு இட்லியை வாயில் வைக்கையில், ஜெயலட்சுமி, “புருசன் உண்டானாகிற நெனப்பே இல்லியே! என்ன வளர்ப்போ.” என்றார்.

அவரது கூற்றின் தாக்கத்தில் அரை நொடி மட்டுமே தனது செயலை நிறுத்தியவள், பிறகு அது தன்னை பாதிக்காதது போல் உண்பதைத் தொடர்ந்தாள்.

வித்யா தான் உண்ண முடியாமல், தோழியை வருத்தத்துடன் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.

திருப்தியுடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்த காயத்ரியும், நிறைமதியும், அவளது எதிர்வினையில் எரிச்சலும் கோபமும் கொண்டனர்.

ஜெயலட்சுமி அவளைத் திட்ட வாயை திறக்கையில், “அதியன் உண்டானானுட்டு கேட்டுட்டுதே உட்காரவே செய்தா…” என்ற மஞ்சுளா, சிறு கோபக் குரலில், “நீக சொன்னத ஒங்களுக்கே சொல்லுக மதினி.” என்றார்.

“அப்ப எங்கூட்டு வளர்ப்பு செரியில்லனுட்டு சொல்லுதியா?”

“நீக மொத சொன்னததே.. நா.. சொன்னேனுட்டு ஒங்களுக்கு தெரியும்.”
என்றவர், “வளர்ப்பு செரியா இருந்தாலு… சிலரது கொணத்த மாத்த முடியாது.” என்ற போது, அவரது பார்வை தமக்கையிடம் இருந்தது.

“என்ன பேச்சிது? இன்னிக்கு வந்தவளுக்காக மதினியவே பேசுவியா?” என்று காயத்ரி கோபத்துடன் கேட்டார்.

“நா… எப்பயு ஒரே மாதிரிதே (அ)க்கா.. தப்பு ஆரு செஞ்சாலு, தப்புதே..! திரிச்சிப் பேசுத வேலய என்னாண்ட வெச்சிக்கிடாத…!”

“நா.. ஒனக்கும் ஜெயாக்கும் சண்ட மூட்டி வுடுறேனுட்டு சொல்லுதியா?”

“இல்லங்கியா?”

“மஞ்சுளா!”


தமக்கையை கண்டு கொள்ளாதவர்… சாருவர்தினி பக்கம் திரும்பி, “நீயி வெசனப்படாத கண்ணு.. இத கண்டுக்காம நல்லா சாப்பிடு.” என்றார்.

அவளோ, “இவ்ளோ நேரம் என்னைப் பத்தியா பேசிட்டு இருந்தீங்க!” என்று கேட்டாள்.

‘நெசமாலு புரியாமதே பேசுதாளா! இப்புடி இருந்தாக்க மொளகா அரச்சிடுவாகளே!’ என்ற நினைப்புடன் அவளைப் பார்த்தவர், அவளது கண்ணோரம் தெரிந்த சின்ன சிரிப்பில் நிம்மதி கொண்டவராக சிரிப்புடன்,

“நீயி பொழச்சுக்குவ கண்ணு” என்றார்.

காயத்ரியோ விடாமல், “இம்புட்டு நேரம் இவுளுக்காகதே நீயி தொண்டத்தண்ணி வத்த பேசின, ஆனாக்க… அவெ ஒன்னியவே நக்கலு செய்தா பாரு.” என்றார்.

“தொண்டத்தண்ணி வத்த பேசி, ஓஞ்சக்திய வீணாக்காம, உருப்படியா ஏதோ செய்.” என்றவர் சாப்பிடாமல் தோழியையே கவலையுடன் பார்த்தபடி இருந்த வித்யாவை பார்த்து, “ஓ… பெரண்டு(friend) சமாளிப்பா.. வெசனப்படாம சாப்பிடு.” என்றார்.

அமைதியாக தலையசைத்தவளின் பார்வை, அப்பொழுதும் தோழியிடம் தான் இருந்தது.

“புது வாரியலு… மொத நல்லாதே பெருக்கும்.” என்று நொடித்த காயத்ரி, நிறைமதி மற்றும் ஜெயலட்சுமியுடன் அங்கிருந்து அகன்றார்.

‘இவள திருத்த முடியாது’ என்று நினைத்த மஞ்சுளா சாருவர்தினியைப் பார்க்க, அவளோ அதை கண்டு கொள்ளவே இல்லை.

மஞ்சுளாவும், சங்கரியும், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

வித்யாவோ, ‘இவ சமாளிப்பானு எனக்கே தெரியுமே! இவ பேச ஆரம்பிச்சா, தெறிக்க விடுவா.. ஆனா, அதுக்கு அப்புறம்! அதியன் கேரெக்டர் நேர்மையானவரா தெரிந்தாலும், குடும்பம்னு வரும் போது… அதுவும் கூட்டுக் குடும்பம்!

இந்தக் கடவுள், ஏன் தான் இவளை இப்படி படுத்துறாரோ! இவளுக்கு அன்பும் அனுசரனையுமான குடும்பம் அமையவே செய்யாதா? ஒரு வாய் சாப்பாடு நிம்மதியா சாப்பிட முடியலனா, என்ன வாழ்க்கை இது!’
என்று வருந்தி பெரிதும் கவலை கொண்டாள்.

மஞ்சுளா, “நந்துவயு தென்றலயு கூட்டியாரேன்.” என்று விட்டு நகர்ந்தார்.

தோழியின் எண்ணம் அறிந்தவள் போல் சாருவர்தினி, “ரொம்ப யோசிக்காம சாப்பிடு.. சின்ன வயசுலேயே இதை விட அதிகமான பேச்சுக்களை கேட்டுட்டேன்.. அந்த வயசுலேயே சமாளிக்க தெரிஞ்ச எனக்கு, இப்போ சமாளிக்கத் தெரியாதா?” என்று மெல்லிய குரலில் பேசினாள்.

“சமாளிப்ப.. ஆனா” என்று ஆரம்பித்தவள் மனதில் நினைத்ததை கூற முடியாமல், சற்றே கலங்கிய விழிகளுடன் அமைதியானாள்.

“சாப்பிடு.. நாம சாப்பிட்ட அப்புறம் தான், மாமா சாப்பிடுவாங்க” என்றவள் வித்யா சாப்பிட ஆரம்பித்ததும், தானும் உண்டபடி,

“ஓவரா யோசிக்காத வித்தி.. நான் எப்போதுமே, ஜஸ்ட் ப்ளோ(flow) வித் தி ப்ளோனு இருக்கிறவனு உனக்கே தெரியுமே.. இந்த அன்பு காதல்லாம் என்னோட எதிர்பார்ப்பில் இருந்ததே இல்லை.. ஸோ, நோ டிஸ்ஸப்பாயின்ட்மென்ட்ஸ்..!

என்னோட கேரெக்டரை சிதைச்சு பேசாதவரை தப்பிச்சாங்க.. இவங்க பேசினா, உடனே கிளியர்-கட் செய்துட்டு கிளம்பி வந்திட மாட்டேன்.. குடும்ப அமைப்போட அருமை, எனக்கு தெரியும்.”
என்றாள்.

“நீ சந்தோசமா இருந்தா போதும்” என்றவள் தோழியின் மகிழ்ச்சிக்காக, மனமுருக வேண்டிக் கொண்டாள்.

மெலிதாக பேசி இருந்தாலும், அவர்கள் பேசியது அருகில் நின்றிருந்த சங்கரியின் காதில் விழுந்தது தான். அவள் ஆங்கிலத்தில் பேசியது அவருக்கு புரியவில்லை என்றாலும், குடும்பத்தின் அருமை தெரிந்த பண்பான பெண் என்றும், சிறு வயதில் இருந்தே பேச்சு வாங்கி கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்றும் புரிந்து கொண்டார்.

உறவு உயிராக காத்திருப்போம்...
குறிப்பு: பையனுக்கு உடம்பு சரி இல்லைனு டாக்டர் கிட்ட கிளம்பிட்டு இருக்கிறேன்.. wordpress சரியா load ஆகலை.. அதான் இப்படி direct போஸ்ட்..
 
💞💞
அதி மைண்ட் வாய்ஸ் 👇👇👇

1000043294.webp

அன்னைக்கு என்னை மட்டும் சப்புன்னு அறைஞ்சே. இன்னைக்கு மதி கன்னத்துல கொடுக்காம கம்முனு வர்றியேம்மா. நம்ப முடியல.. ஒரு வேளை குடும்பஸ்ஸ்ஸ்ஸ்த்ரி ஆகிட்டீதால் மொத நாளே அடிக்க வேணாம்னு பார்க்குறாளோ??
 
Last edited:
Take care of kutty sis.

சாரு பேசிருக்க மாட்டானு அதியனுக்கு தெரிஞ்சாலும் நிறைமதி சொன்னதும் என்ன பார்வை.. தெரியாம இடிச்சாளாமே..

மஞ்சும்மா, சங்கரி அத்தை பரவால்ல..

நாத்தனார் பொண்ணுன்றத தாண்டி தோழி பொண்ணுன்னு கூடுதல் concern போல இந்த ஜெயலட்சுமிக்கு..
 
Back
Top
Developed and maintained by – Akeshya