தஞ்சையின் தலைவன்
தன்னைகரில்லா மன்னவன்
ஆட்சியின் நீட்சியாக நிற்கும்
பெருவுடையார் பெருமைகளை
உவப்பான உண்மைகளை
உள்ளம் இனிக்க
உறக்க சொன்ன கதை
சிந்தை மறந்த சிறுதானியங்களை
சிறு பொழுது எடுத்தாலும்
சிறப்பான பலன் தரும்
சிறு முயற்சி செய்யுங்கள் என
சிந்தைக்குள் சேர்க்கும் கதை
மூதாதையரின் நுண் அறிவு புரிந்த
கலை நுணுக்கங்களை ரசிக்க தெரிந்த சேரன்
சிறு தானியங்கள் நமது கொடை
சிறு பொழுதாவது தேடி உண் எனும்
சிந்தை கொண்ட சிற்பத்திடம்
சிந்தை மயங்கி சிந்தித்தான்
சிறப்பான நித்திலத்தை தன்னோடு
சிறு பொழுதும் பிரியாமல் சேர்த்துக் கொள்ள
தன்னிகரில்லா தலைவன்
சேர குடும்ப
தலைமுறை வாரிசின் காதல்
கண்ட போர்க்களமே
இந்த புதினத்தின் கதைக் களம்
நங்கை அவள் நாட்காட்டியில்
மறைந்து போன நாட்கள்
மனதில் தந்த வழிகளில்
வாடி நின்ற நங்கை
தேடி வந்த காதலில்
யாதுமாகி நிற்பேன் என
கரம் நீட்டியவன் கரம் பற்றி
காவியம் படைத்த கதை
உறவின் பெயரில் அல்ல
உள்ள அன்பில் உள்ளது
உண்மையான உறவு என
நயன விழிகளால் வலம் வந்த
நங்கையின் கதை இது
இச்சைக்குப் பலியாகும் இளங்குறுத்துகள்
போகப் பொருளாய் பூசித்து
உயிரில்லாமல் உலாவ விடும்
காமூகன் எனும் ராட்சதர்கள்
அச்சோ என்று உச்சுக் கொட்டி
அலுத்துக் கொள்ளும் வகையில்
அன்றாட செய்தி ஆன
அவலத்தை அறைக்கூவலில்
அறியச் செய்த கதை.
சிறப்பான சிந்தனைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தோழி
அன்புடன்
கவிரகு