• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி -2

நாம் வளருகின்ற போது நம்மைச் சுற்றி உள்ள சமூகத்தை குறிப்பாக இளைய சமூகத்தை ஊக்கப்படுத்தி வளர்க்க வேண்டும் என்பது என் கொள்கை.

இத்தளத்தில் வாசகியாக அறிமுகமாகி ஒரு சகோதரியாக மாறிய திருமதி ஜெயந்தி அவர்களின் மகள் இனியாவின் கவித்திறமையை சமீபத்தில் கண்டு கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. இனியா முதுகலை வரலாறு படிக்கின்றவர் அவரை இந்த அத்தியாயத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள் என்றேன். மிக அழகாக ஒன்று எழுதித் தந்தார். மனம் மகிழ்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் இனியாவுக்கு தாருங்கள். இது மாதிரி குழந்தைகள் எழுதினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். ஊக்குவிப்போம். ❤️ ❤️ ❤️ ❤️

உதட்டில் இன் சொல்லும்
கண்ணில் கண்டிப்பும்
கலந்து பிறந்த சோழனோ?
தீராக் காதல் கட்டிடக்கலையில்
ஆதலால் பிரிந்தான் தனித்துறையில்
பொறியியல் பட்டதாரி
பொறுமையின் சூத்திரதாரி
வனத்தில் இராஜ்ஜியம் ஒன்று
இளையோர் விளையாட
பெரியோர் இளைப்பாற
விடுமுறை ஓய்வகமாக
இயற்றிச் சிறந்தான் தனி ஓவியமாக!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி -2 (1)
நித்திலப் பேரொளி -2 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya