உங்கள் கதையின் தலைப்பு எல்லாம் வித்தியாசமாக உள்ளது. தொன்மங்களைத்தேடி என்னும் தலைப்பைப் பார்த்துத் தான் கதை படித்தேன். நன்றாக இருந்தது. நித்திலப்பேரொளி கதையில் தஞ்சை பெரிய கோவில் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை தஞ்சை செல்லும் போது கண்டிப்பாக கதையில் படித்த சிற்பங்களையும் நித்திலப்பேரொளியாம் பிரகதீஸ்வரரையும் தரிசிக்க வேண்டும். ஆதேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நித்திலாவைப் புரிந்து கொள்வது அருமை. சலீம் கலகலப்பான நண்பன். கதை மாந்தர்கள் அனைவரும் அருமை. சிறு தானிய உணவுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் கதையில் வரும் திருவாசகப் பாடல் அதன் விளக்கம் அருமை.